உன் கரங்கள் பற்றியே என்காலம் முற்றுதே
என் ஆசை காதலும் உன்னை சுற்றுதே
என் பாதையும் உன் நிழலை தொடருதே
என் வேகம் எல்லாம் உன் விழியில் சிக்குதே
என் விசை எல்லாம் உன்னை ஈர்க்கும் ஆசையில் புதையுதே
என் குழந்தை மனமும் உன் மடி சாயுதே
என் வேர்கள் எல்லாம் உன் மனதை பற்றுதே
உன் பிரியங்களால் என் இதயமேகம் கரையுதே
என் காதல் வானவில்லும் கொஞ்சம் வலையுதே
என் ஆசைகள் எல்லாம் உன் அன்பில் தவிக்குதே
என் நேச அலைகளும் உன் மனதை நனைக்குதே
என் இரவல் நட்பும் இன்று காதலாகுதே
என் எல்லா எல்லைகளும் உன் முன்னே முடியுதே
என் புது உலகமும் நீயாக தொடங்குதே
என் காதலை தாண்டியும் புது அன்பு தொடருதே
என் வாழ்நாள் தவமும் வரமாய் கிட்டுதே
உன் பிரியா ஆறுதல்களும் பிரியங்களாய் மாறுதே
உன் மூச்சு காற்று தொட்டவுடன் என் முதல் சுற்று அடங்குதே
உன் பாசமும் என்னை சுற்றி அரணாய் விரியுதே
இடைவேளை இன்றியே ஒரு நாடகமும் தொடருதே
கண்டும் காணாமலும் ஒரு தயக்கம் நீழுதே
தொடரும் ஆசையெல்லாம் உன்னாலே மயங்குதே!
உன் என் கண் ....
ReplyDeleteநல்லா இருக்கு
//sasikala said...
ReplyDeleteஉன் என் கண் ....
நல்லா இருக்கு//
நன்றிகள்