Friday 30 December 2011

எண்(கண்)கள் அறியா காதல்



ஒன்றாய்       தொடங்கி
  இரண்டாய்   இணைய
    முன்றாம்      உலகத்தில்
       நான்கு           திசை அறிய
        ஐந்து              புலன்களும் உன்னை தேட
         ஆறாம்          அறிவால் சேர்ந்து  
           ஏழு                பிறவியிலும்
             எட்டாவது   அதிசயமாய்  
               ஒன்பதாம்   ஆசையாய் 
                 பத்தும்          பொருந்தும் நம் வாழ்க்கை      
                                                               இந்த காதலால்- 
                         
                                                                      எண்ணில் தொடங்கியது-                     
                                                                      உன்னில் முடிவதற்கு

Thursday 29 December 2011

ஒரு முறை சொல்லிவிடு



இரவில் கண் விழிக்கும் குழந்தையாக
தேடுகிறேன் என் காதலை

என் கண்ணோடு ஓரமாய் உன் காதலும்
ஈரமாய் கசிவதை காணுகிறேன்

பேசும் வார்த்தை இடையில் சிக்கி தவிக்கும்
மூச்சு கற்றாய் என் காதலும் உன்னிடம்

படிக்கும் பக்கங்கள் எல்லாம் உன் நினைவுகளாக
இருக்க எதில் தேர்ச்சி அடைவதற்கு
இந்த தேர்வுகள்

இரவில் தூரத்தில் கேட்கும் வரிகள் புரியா
 இசையில் உன் நினைவுகள் உலாவருவதை 
உணர்கின்றேன்

என்னை முச்சடைக்க வைக்கிறது 
சிறகடித்து கொண்டே இருக்கும் உன் 
வண்ணத்துபூச்சி இமைகள்

வீசும் காற்றுக்கு கூட வியர்க்கிறது உன்
மீது பட்டவுடன்

என் விடியலை எல்லாம் நனைத்து கொண்டு
இருக்கிறாய் பனித்துளியை

என் தோட்டது வெள்ளை ரோஜாக்கள் எல்லாம்
சிவந்தன உன்னை பார்த்த வெட்கத்தில்

உன் முகம் தெரியாத நிழலையும்
இன்னும் என் மீது சுமந்து உன்னை நேசித்து
கொண்டுதான் இருக்கிறேன்

உன்னை எங்காவது பார்த்து பேசும் ஆசையில்
கடிகாரத்தில் துடித்து கொண்டுதான்
இருக்கிறது என் வினாடிகள்

பேசாத பூக்கள்கூட என் அன்பை சொல்லிடுதே
பேசும் உன் வார்த்தை மௌனம்
என்னைத்தான் கொன்றிடுதே

உன்னை நினைத்து கண்ணீர் சிந்தி 
கலங்கிவிட்டது என் கண்களும் கரைந்துதான்
போகிறது என் இதயமும்

உனக்காக இருந்த என் நிமிடங்கள்
கானல்நீராய் மாறி என்னை
ஏமாற்றி கொண்டு இருக்கிறது

அவள் கண்கள் பேசிய எல்லா மொழிகளையும்
புரிந்துகொண்டேன் அவள் கடைசியாய்
பேசிய என் தாய் மொழி புரியாமல்
மரணித்து கொண்டு இருக்கிறேன்

ஒருமுறை சொல்லிவிடு அந்த சந்தோஷமே
போதும் மூச்சடைத்து விடுவேன் பெண்ணே

சிலந்தி வலையில் சிக்கியதாக துடித்து
கொண்டுருகிறது நீ  இன்றி என் நினைவுகள்

என் இதய சிப்பியில் இன்னுமும் உன்
நினைவு முத்துகள் துடித்து கொண்டுதான்
இருக்கிறது அதனால் தான் வாழ்கிறேன்

என் மரணநிலையிலும் உன்னை பார்க்க என் இதயம்
கடைசியாக மூன்று முறை துடிக்கும் வந்துவிடு
இல்லை வெந்துவிடும் என் காதல்

யாரும் அறியாமலே.....!


Saturday 24 December 2011

போதும் எனக்கு ..


என் இயல்பு வாழ்க்கையில் இடை மறித்து
பயணம் செய்ய வந்தவள் நீ போதும் எனக்கு!

என் நிழல் அறியாவண்ணம் என் நிஜத்தில்
நுழைந்தவள் நீ போதும் எனக்கு!



என் இரு புருவத்திற்கு இடையில்
புதையலாய் நுழைந்தவள் நீ போதும் எனக்கு!

உன் வார்த்தைகளில் மறைந்து இருக்கும்
என்மீது உள்ள காதல் போதும் எனக்கு!

நான் காதல் சொல்கையில் நீ பதில்தந்த
உன் வெட்கமே போதும் எனக்கு!

என் காதல்பூத்த உன்
முதல் மௌனம் போதும் எனக்கு!

ம் காதலை உணர்ந்த அந்த
நிமிடம் போதும் எனக்கு!

என் கண்ணீரை துடைக்கும் ன்
கைகள் போதும் எனக்கு!

என்னை சுற்றி இருக்கும் உன்
சுவாசம் உயிர்வாழ போதும் எனக்கு!

விசும் காற்று நுழையா வண்ணம் உன்
அணைப்பு போதும் எனக்கு!

என் தொலைதூர பயணம் உன்
கை பற்றியே போதும் எனக்கு!

என் விடியலுக்காக காதிருக்கும் உன்
பார்வை போதும் எனக்கு!

என் கருகிய இரவுக்கு உன் ஒற்றை
புன்னகை போதும் எனக்கு!

என் கனவுகள் உன் மடி
இருந்தால் போதும் எனக்கு!

என் வானம் எங்கும் வெள்ளி மழை
வானவில் நீ இருந்தால் போதும் எனக்கு!

என் களைப்பு உன் தோள்
சாய்ந்தால் போதும் எனக்கு!

என் தாகம் உன் ஒற்றை
முத்தம் போதும் எனக்கு!

நான் தடுமாறும் போது உன்
கண் அதிர்வு போதும் எனக்கு!

என் மாற்றத்தில் என்றும்
நீ இருந்தால் போதும் எனக்கு!

நீ திருத்துவதற்காக நான் பிழையாகவே
இருக்கிறேன் அது போதும் எனக்கு!

நீ ஒருபுறம் கரைகிறாய் மறுபுறம் நான்
எரிகிறேன் அது போதும் எனக்கு!

என் ஓவியத்தில் என்றும்
நீ புன்னகை போதும் எனக்கு!

என் விடியலில் பனித்துளியாய்
நீ போதும் எனக்கு!

என் இரவில் நட்சத்திரமாய்
நீ போதும் எனக்கு!

என் கவிதைகளில் வரிகளாய்
நீ போதும் எனக்கு!

என் முயற்சியில் என்றும் உன்றுகோளாய்
நீ போதும் எனக்கு!

என் வெற்றிகளின் பின் இருக்கும் உன்
முயற்சி அது போதும் எனக்கு!

என் தோட்டத்து பூக்களில்
நீ முள்ளாக போதும் எனக்கு!

என் கேள்விக்கு உன் பட்டாம்பூச்சி
கண் செய்கைள் போதும் எனக்கு!

என் கண்களில் கட்சியாய் என்றும்
நீ போதும் எனக்கு!

என் வெயிலிலும் மழையிலும் குடையாக
நீ போதும் எனக்கு!

என் வலிகளில் மருந்தாக
நீ போதும் எனக்கு!

என் நிஜங்களில் நிழலாக
நீ போதும் எனக்கு!

என் நேரங்களில் நீ சில
விநாடிகலாய் இரு போதும் எனக்கு!

என் எல்லா சோகங்களை மாற்றும் நீ மறைக்கும் 
ஒற்றை கண்ணீர்துளி போதும் எனக்கு!

என் வாசலில் கோலங்கள் தேவை இல்லை
நீ கால்தடம் பதித்துசெல் போதும் எனக்கு!

என் கற்பனையில் உன் முகம்
என்றும் போதும் எனக்கு!

என் காலங்களை கடத்திய உன்
காதல் போதும் எனக்கு!

என் வாழ்கையில் என்றுமே உன்
நினைவுகள் போதும் எனக்கு!

உன் நினைவின் போது வரும் என்
               கண்ணீர் துளி போதும் எனக்கு!

Wednesday 21 December 2011

நிலாமகள்



நட்சத்திர இரவு ஒரு நிலவோடு

நிலாவில் நடப்பது கடினம் என்று சொன்னார்கள்
ஆனால் இங்கு ஒரு நிலவே என்னுடன் 
மிதந்து கொண்டிருக்கிறது அவளாக

நிலவை பின் தொடர்ந்தேன் நிலத்திலே 
கைபற்றினேன் அவள் கைபிடித்து



நிலவை தொட்டுவிடும் ஆசையில்லை எனக்கு 
உன் நிழல் பற்றினாலே போதும் பெண்ணே

நிலவை சிறை பிடிக்க எண்ணி ஏமாந்தவை 
என் ஜன்னல் கம்பிகள் உன்னால் என் இதயம்



பாதசுவடுகள் நடக்கையில மட்டும்தான் 
வரும் என்ன அதிசயம் நீ மிதகையிலும்

நான் உன்னை பார்கிறேன் வெட்கத்தில் நிலா மறைகிறது

நீ குளத்து நீரில் முகம் துடைகிறாய் நிலா 
சிலிர்கிறது பிம்பமாக



அழகிய பூமிக்கும் அழகிய வானுக்கும் வைத்த 
திருஷ்டி பொட்டுக்கள் நீ நிலா 

நீ முகம் மறைத்த வெட்கத்தில் மேகத்தில் 
ஒளிந்த வளர்பிறை நிலாக்கள்




நான் எங்கு சென்றாலும் நீயும் தொடர்கிறாய் நான் 
நின்றால் நீயும் அசையாமல் அழகாக


மஞ்சள் பூசிய அவள் முகம் அந்தி உதிக்கும் நிலவு 

என்றுமே வெள்ளை உடை அணிகிராயே நீதான்
தேவதையோ இல்லை பெரியாரின் பக்தையோ




பிறை நிலா உன் நெற்றியே என்றும் ஞாபகம்

கருப்பு மாளிகையில் என்றுமே வெள்ளை நிலா 
நீ இங்கு வெள்ளை மாளிகையில் 
உலாவருகிறது கருப்பு நிலா உன் கண்கள்

நிலவில் பன்னீர்பூக்கள் உன் சிரிப்பு



உன் கூந்தல் மல்லிகைபூக்கள் இரவு 
நிலவாக என் ரசனையில்

சந்திரகிரகணம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது
நீ கண் சிமிட்டுகையில்

நீ உறங்குகையில் கூட என் தனிமை 
போக்குவதற்கு வருகிறாயா நிலவாக



நிலவில் இருந்து சில முத்துசிதறல் 
உன் கண்ணீர் துளிகள்

நீயும் நிலவை போல் என்னையே சுற்றி 
வருகிறாய் வேர் எதுவும் அறியாமல்

நான் பார்க்காமல் போன ஆயிரம் பௌர்ணமிகள் 
ஒன்றாக அவள் வெள்ளை பட்டு உடுத்தி வருகிறாள்



என் காதலாக நீ வளர்க்கிறாய் உன் 
ஏக்கமாக நான் தேய்கிறேன்

பால்சிந்தும் நிலவில் தேன் சிந்தும் உன் வார்த்தை

என்னோடு நீ இருந்தால் நிலவும் இருட்டாக தெரிகிறது



பௌர்ணமியில் தான் அதிகம் கொந்தளிகுமாம் 
கடல் அலைகள் இங்கு ஒரு பௌர்ணமியே 
கொந்தளிக்கிறது என்மீது அன்பு கொண்டு
 அழகாக அவள் கோவத்தில் 


என் ரசிகை