Thursday 29 December 2011

ஒரு முறை சொல்லிவிடு



இரவில் கண் விழிக்கும் குழந்தையாக
தேடுகிறேன் என் காதலை

என் கண்ணோடு ஓரமாய் உன் காதலும்
ஈரமாய் கசிவதை காணுகிறேன்

பேசும் வார்த்தை இடையில் சிக்கி தவிக்கும்
மூச்சு கற்றாய் என் காதலும் உன்னிடம்

படிக்கும் பக்கங்கள் எல்லாம் உன் நினைவுகளாக
இருக்க எதில் தேர்ச்சி அடைவதற்கு
இந்த தேர்வுகள்

இரவில் தூரத்தில் கேட்கும் வரிகள் புரியா
 இசையில் உன் நினைவுகள் உலாவருவதை 
உணர்கின்றேன்

என்னை முச்சடைக்க வைக்கிறது 
சிறகடித்து கொண்டே இருக்கும் உன் 
வண்ணத்துபூச்சி இமைகள்

வீசும் காற்றுக்கு கூட வியர்க்கிறது உன்
மீது பட்டவுடன்

என் விடியலை எல்லாம் நனைத்து கொண்டு
இருக்கிறாய் பனித்துளியை

என் தோட்டது வெள்ளை ரோஜாக்கள் எல்லாம்
சிவந்தன உன்னை பார்த்த வெட்கத்தில்

உன் முகம் தெரியாத நிழலையும்
இன்னும் என் மீது சுமந்து உன்னை நேசித்து
கொண்டுதான் இருக்கிறேன்

உன்னை எங்காவது பார்த்து பேசும் ஆசையில்
கடிகாரத்தில் துடித்து கொண்டுதான்
இருக்கிறது என் வினாடிகள்

பேசாத பூக்கள்கூட என் அன்பை சொல்லிடுதே
பேசும் உன் வார்த்தை மௌனம்
என்னைத்தான் கொன்றிடுதே

உன்னை நினைத்து கண்ணீர் சிந்தி 
கலங்கிவிட்டது என் கண்களும் கரைந்துதான்
போகிறது என் இதயமும்

உனக்காக இருந்த என் நிமிடங்கள்
கானல்நீராய் மாறி என்னை
ஏமாற்றி கொண்டு இருக்கிறது

அவள் கண்கள் பேசிய எல்லா மொழிகளையும்
புரிந்துகொண்டேன் அவள் கடைசியாய்
பேசிய என் தாய் மொழி புரியாமல்
மரணித்து கொண்டு இருக்கிறேன்

ஒருமுறை சொல்லிவிடு அந்த சந்தோஷமே
போதும் மூச்சடைத்து விடுவேன் பெண்ணே

சிலந்தி வலையில் சிக்கியதாக துடித்து
கொண்டுருகிறது நீ  இன்றி என் நினைவுகள்

என் இதய சிப்பியில் இன்னுமும் உன்
நினைவு முத்துகள் துடித்து கொண்டுதான்
இருக்கிறது அதனால் தான் வாழ்கிறேன்

என் மரணநிலையிலும் உன்னை பார்க்க என் இதயம்
கடைசியாக மூன்று முறை துடிக்கும் வந்துவிடு
இல்லை வெந்துவிடும் என் காதல்

யாரும் அறியாமலே.....!


2 comments:

  1. அட.. பின்றீங்க நண்பா..

    ReplyDelete
  2. \\கோவி said...
    அட.. பின்றீங்க நண்பா..//

    நன்றி ஆதரவுக்கு தொடரட்டும் உங்கள் ஆதரவு நான் பயணிக்க

    ReplyDelete