Thursday 24 November 2011

நெறிஞ்சுமுள்



இன்னும்  என் கைக்குட்டையை அவள் வியர்வை ஈரங்கள் நனைத்து கொண்டுதான் இருக்கிறது
இன்னும் என் சடையில் அவள் மல்லிகை பூ மனம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது
இன்னும் என் கைகளில் அவள் ரேகைகள் பதிந்து கொண்டுதான் இருக்கிறது
இன்னும் என் நெஞ்சுனுள் அவள் முத்தங்கள் கரைந்து கொண்டுதான் இருக்கிறது
இன்னும் என் சுவாசத்தில் அவள் மூச்சு காற்று கலந்து கொண்டுதான் இருக்கிறது
இன்னும் அவள் குங்குமத்தின் உதிரல்கள் என் மீது விழுந்து கொண்டுதான் இருக்கிறது
இன்னும் அவள் கூந்தல் காற்றால் என் முகத்தை மூடிக்கொண்டுதான் இருக்கிறது
இன்னும் என் காதில் அவள் வார்த்தைகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது
இன்னும் என் கண்ணில் அவள் புன்னகை முகம் பதிந்து கொண்டுதான் இருக்கிறது
இன்னும் என் நெற்றியில் அவள் வைத்த விபூதி பதிவுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது
அவள் நிஜங்களில் செய்ததை எல்லாம் இன்னுமும் என் நினைவுகளில் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் எப்படி மறப்பதற்கு!  அவள் இல்லாமல் அவள் நினைவுகளோடு மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்  இருக்கமாக 

No comments:

Post a Comment