Thursday 24 November 2011

காதல் சொல்ல வந்தேன் ..


 உன்னை பார்க்கவந்த நேரம் முழுவதுமாய் இருளவும்
  இல்லை வெளிச்சமும் இல்லை 
 அழகான அந்தி மாலை பொழுது தென்றல் வீசும் நேரம் 
 தூரத்தில் வெண்ணிலாவும் மெதுவாக 
 கண்விழிக்கிறது 
 காத்துருகிறது காதல் அரங்கேற 
 புதிராய் ஒரு வானவில் வந்துபோகிறது அழகாக 
 பறக்கும் வண்ணத்துபூச்சியும் ஒரு நிமிடம் 
 என்னை நின்று பார்ப்பது போன்ற ஒரு உணர்வு 
 தூரத்தில் நீ வருவதை உன் கொலுசுகள் உச்சரித்தது
 உன் முச்சு காற்று ஒரு தென்றலாய் 
 என்னை வருடி சென்றது 
 உன் சப்தம்கேட்டு என் இதய துடிப்பும் பெருகியது 
 உன் விழி வார்த்தைக்காக காத்திருந்தேன் 
 நான் காதல் சொல்லவந்தேன் உன்னிடம் ..................

No comments:

Post a Comment